close
Choose your channels

ஆர்த்தி சொன்ன பிக்பாஸ் குட்டிக்கதை

Wednesday, August 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான ஆர்த்தி சில வாரங்களுக்கு முன் வெளியேறினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஆர்த்தி, பிக்பாஸ் குறித்து ஒரு குட்டிக்கதை கூறினார்.
ஒரு காட்டுக்குள் 100 நாள் இருக்கணும்ன்னு என்னை அனுப்பினார்கள். அந்த காட்டில் நான் மான், மயில், ஒட்டகச்சிவிங்கி எல்லாம் பார்த்தேன். அதோடு சேர்த்து அங்கு ஒரு எலியும் இருப்பதை பார்த்தேன். அந்த எலி என்னை நெருங்கி நெருங்கி வரும்போது அதை நான் போலி என்று கண்டுபிடித்துவிட்டேன். உடனே அந்த எலி, 'என்னை இவங்க போலின்னு சொல்லிட்டாங்க, நான் இப்பவே வீட்டுக்கு போறேன்னு சீன் போட்டாங்க. அதை பார்த்த சிலர், ஒரு எலியை போய் திட்டினாயே என்று என்னை வெளியே அனுப்பிட்டாங்க
அப்புறம்தான் எல்லாருக்கும் தெரியுது அது நிஜமாகவே போலின்னு. இப்ப மக்கள் என்னை என்ன சொல்றாங்கன்னா, அந்த எலியை ஓங்கி ஒரு மிதி மிதிச்சிட்டு வந்திருக்கலாம்ன்னு சொல்றாங்க. இதுதான் பிக்பாஸ் கதை. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை' என்று குட்டி கதையை முடித்தார்
மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் என்னைப்பற்றி வந்த மீம்ஸ்கள் அனைத்தையும் படித்தேன். உண்மையாக இருந்தால் மக்கள் ஆதரவு என்றைக்கும் உண்டு என்பதையும் உணர்ந்தேன். உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். உள்ளே இருக்குறவங்க தப்பு செய்கிறார்கள் என்று திட்டி உள்ளே இருப்பவர்களை விட நீங்கள் தரக்குறைவாக நடந்து கொள்ள வேண்டாம். அவர்கள் செய்யும் தவறை நீங்கள் செய்து கொண்டிருந்தால் அதை திருத்தி கொள்ளுங்கள். இதுதான் பிக்பாஸில் இருந்து நீங்கள் பெற வேண்டிய பாடம்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.