close
Choose your channels

ஓவியா எங்கே?

Wednesday, August 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்ட ஓவியா, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி பிக்பாஸ் வீட்டை விட்டே கடந்த வாஅரம் வெளியேறினார். அவரது மன தடுமாற்றத்திற்கு ஆரவ்வின் மருத்துவ முத்தமும் ஒரு பெரிய காரணம்
பொய், பித்தலாட்டம், நம்பிக்கை துரோகம், ஆகிய தீய சக்திகளுக்கு நடுவே ஓவியாவின் உண்மை எடுபடாததால் வேறு வழியின்றி ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறியவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
பொதுவாக விஜய் டிவியினால் பிரபலம் ஆனவர்கள் பலர் என்று கூறுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை ஓவியாவால்தான் விஜய் டிவிக்கே ஒரு மதிப்பு கிடைத்தது. ஆனால் அந்த மதிப்பையும் தற்போது அந்த டிவி இழந்துவிட்டது.
இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா தற்போது கேரளாவில் ஓய்வு எடுப்பதாகவும், கடும் மன உளைச்சலில் இருக்கும் அவருக்கு அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான ரம்யா நம்பீசன் அரவணைப்பு தந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் ஓவியா நுழைந்த நாள் முதல் அவருக்கு டுவிட்டரில் ஆதரவு கொடுத்து வரும் ரம்யா நம்பீசன், தற்போது வெளியே வந்த பின்னரும் அவருக்கு ஆறுதலாக உள்ளார். மிக விரைவில் மன அழுத்தத்தில் இருந்து வெளியே ஓவியா வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.