close
Choose your channels

பாபிசிம்ஹா படத்திற்கு சென்சார் போட்ட முட்டுக்கட்டை

Saturday, April 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாபிசிம்ஹா நடித்த 'கோ 2' வரும் மே 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான 'மெட்ரோ' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை சென்சார் செய்ய சென்சார் அதிகாரிகள் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் அதிகமான அளவில் வன்முறை காட்சிகள் இருப்பதால் இந்த படத்திற்கு 'யூ', 'யூ/ஏ', 'ஏ' சர்டிபிகேட்டுக்கள் கொடுக்க முடியாது என்றும் மொத்தத்தில் இந்த படம் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தகுதியில்லாத படம் என்றும் சென்சார் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
எனவே படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு இந்த படத்தை அனுப்ப முடிவு செய்தனர். ரிவைசிங் கமிட்டியினர் இந்த படத்தை பார்த்தபின்னர்தான், இந்த படம் வெளிவருமா? என்பது குறித்த விபரங்கள் தெரியவரும்
விதார்த் நடித்த 'ஆள்' படத்தை இயக்கிய அனந்தகிருஷ்ணன் இயக்கிய இந்த படத்தில் பாபிசிம்ஹா, ஷ்ரிஷ், செண்ட்ராயன், சத்யா, நிஷாந்த், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜோஹன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.