close
Choose your channels

சிறைக்கு வெளியே வந்தார் குண்டர் சட்டத்தின் குரல்வளையை நெறித்த வளர்மதி

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த சேலம் மாணவி வளர்மதியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட் அவர் மீதான குண்டர் சட்டத்தை நீக்கி உத்தரவிட்டது. இதற்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வளர்மதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் கோர்ட் உத்தரவின்படி சற்றுமுன்னர் வளர்மதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்த நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், 'குண்டர் சட்டத்தின் குரல்வளை நெறித்து..தங்கை வளர்மதி தரணி போற்ற வருகிறாள்' என்று கூறியுள்ளார்.

இன்றைய இளையதலைமுறைகள் சமூக அநீதி நடைபெறும்போது 'எனக்கென்ன' என்று ஒதுங்கியிராமல் போராடும் குணம் படைத்தவர்களாக இருப்பதால் இனி அதிக நாட்கள் அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்ற முடியாது என்பது இந்த விடுதலையின் மூலம் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.