close
Choose your channels

'வேதாளம்' போன்ற படத்தை எடுக்க மாட்டேன். கெளதம் மேனன்

Saturday, November 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த தீபாவளி தினத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சிவா இயக்கிய 'வேதாளம்' சூப்பர் ஹிட் ஆகி ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ள நிலையில் அஜீத்தை வைத்து 'வேதாளம் டைப் படத்தை இயக்க மாட்டேன் என்றும் அவரை வைத்து 'என்னை அறிந்தால்' போன்ற படத்தை இயக்கவே தான் விரும்புவதாகவும் பிரபல இயக்குனர் கவுதம்மேனன் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கவுதம் மேனன், 'என்னை அறிந்தால்' இரண்டாம் பாகத்தின் முதல் பாதியின் கதையை முடித்துவிட்டதாகவும், இரண்டாவது பாதியையும் முடித்த பின்னர் அஜீத்தை அணுக முடிவு செய்திருப்பதாகவும் கவுதம் மேனன் கூறியுள்ளார்.

மேலும் 'வேதாளம்' படம் தீபாவளியை மனதில் வைத்து உருவாக்கியுள்ளதாகவும், இதுபோன்ற ஒரு படத்தை நான் அஜீத்தை வைத்து இயக்க மாட்டேன்' என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.