close
Choose your channels

சகலகலாவல்லவனாக மாறிய அப்பாடக்கர்?

Thursday, July 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் 'ரோமியோ ஜூலியட்' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஜெயம் ரவி, தற்போது அதே உற்சாகத்துடன் 'அப்பாடக்கர்' படத்தையும் நடித்து முடித்துவிட்டார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவியோடு த்ரிஷா, அஞ்சலி, பிரபு, விவேக், சூரி, 'நான்கடவுள்' ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை பூர்ணா, சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.


எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு, செல்வா படத்தொகுப்பும் செய்துள்ளனர். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன் போன்ற பல படங்களை இயக்கிய சுராஜ் இயக்கியுள்ளார்.

விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் டைட்டிலை தற்போது அப்பாடக்கர்' என்பதில் இருந்து சகலகலாவல்லவன்' என்று மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அப்பாடக்கர் என்ற வார்த்தை தமிழ் வார்த்தையாக இல்லாமல் இருப்பதால், வரிவிலக்கு கிடைப்பதில் பிரச்சனை ஏற்படும் என்பதால் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சகலகலா வல்லவன் என்ற பெயரில் கமல்ஹாசன் - அம்பிகா நடிப்பில் கடந்த 1982ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.