close
Choose your channels

முரசொலி பவளவிழாவில் கலந்து கொண்ட கமல்-ரஜினி

Thursday, August 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்று வரும் முரசொலி பவளவிழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் விழா நடைபெறும் அரங்கத்திற்கு வருகை தந்தார். ஆனால் அவர் பார்வையாளராக மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்கிறார். முன்னதாக கமல்ஹாசனும் விழா அரங்கத்திற்கு வருகை தந்துள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் கமல்ஹாசன் தனது உரையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருமே ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அரசியல் கலந்த ஒரு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்வது திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.