close
Choose your channels

முதல்முறையாக முதல்வரின் ராஜினாமா குறித்து பேசிய கமல்!

Wednesday, August 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளம் மூலம் அரசியல் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை அமைச்சர்கள் ஊழல் குறித்து மட்டுமே பேசி வந்த கமல்ஹாசன் தற்போது முதல்வரின் ராஜினாமா குறித்தும் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் பதிவு செய்த இரண்டு டுவீட்டுகளில், ' எனது குறிக்கோள் தமிழகத்தை முன்னேற்றம் அடையச் செய்வதே. என்னுடைய குரலுக்கு வலுச் சேர்க்கும் துணிவு யாருக்கெல்லாம் இருக்கிறது?. தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதற்கான கருவி மட்டுமே. கருவியின் முனை மழுங்கிவிட்டால் வேறு கருவிகளைக் கண்டறிவோம். ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும், லெல்வோம்' என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் இன்னொரு டுவீட்டில், 'அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்றால், தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்தும், எந்த அரசியல் கட்சியும் முதலமைச்சரின் ராஜினாமாவைக் கோராதது ஏன்?.என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த டுவீட்டுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நேற்று முக்கிய தொலைக்காட்சிகளில் அரசியல் தலைவர்கள் நேரலையாக விவாதம் செய்யும் அளவுக்கு இந்த டுவீட்டுக்கள் காரணமாக இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.