close
Choose your channels

கே.வி.ஆனந்த் படத்தில் இணையும் புதிய எழுத்தாளர்

Saturday, November 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோ, அயன், அனேகன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்பட ஒருசிலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக அவருடைய அடுத்த பட ஹீரோ யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் அவருடன் இணைந்து திரைக்கதையை எழுதி வரும் நபர் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இதுவரை கே.வி.ஆனந்த் தான் இயக்கிய கோ, அயன், மாற்றான், அனேகன் ஆகிய படங்களில் பிரபல எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து பணியாற்றினார். ஆனால் அவருடைய அடுத்த படத்தில் இணைபவர் கபிலன் வைரமுத்து என கூறப்படுகிறது. ஆனந்த்-கபிலன் ஆகியோர் இணைந்து உருவாக்கி வரும் திரைக்கதை இறுதி வடிவம் பெற்றுள்ளதாகவும், விரைவில் ஹீரோ முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கே.வி.ஆனந்த் இயக்கிய 'அனேகன்' திரைப்படத்தில் கபிலன் வைரமுத்து ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.