close
Choose your channels

லைகாவின் அடுத்த படத்தில் ஷங்கர்-வடிவேலு

Tuesday, April 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2006ஆம் ஆண்டு ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகள் சமீபத்தில் வெளிவந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படத்தை மீண்டும் சிம்புதேவன் இயக்குவார் என்றும் வடிவேலு முக்கியவேடத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது.
இதுகுறித்து லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜூ மகாலிங்கம் தனது சமூக வலைத்தளத்தில் 'வெள்ளைக்கொடிக்கு மீண்டும் வேளை வந்துவிட்டதா? என்று கூறியதோடு எஸ்.பிக்சர்ஸ் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது' என்று தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.