close
Choose your channels

மணிரத்னத்தின் 3 மாத திட்டம்

Saturday, August 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சூப்பர் ஹிட்டான 'ஓகே கண்மணி'யை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்தபடத்தின் திரைக்கதை தயாராகிவிட்டது என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் கார்த்தி, துல்கார் சல்மான், ஸ்ருதிஹாசன், கீர்த்தி சுரேஷ், ஆகியோர் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

விரைவில் ஆரம்பமாக இந்த படத்தின் படப்பிடிப்பை மூன்றே மாதங்களில் முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மணிரத்னம் அவர்களுடன் முதன்முதலாக கைகோர்க்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். இவர் ஏற்கனவே தமிழில் ஆட்டோகிராப், அந்நியன், தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, வில்லு போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ''ஓகே கண்மணி' படத்தை போலவே இந்த படமும் ஒரு வித்தியாசமான ரொமாண்டிக் படம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.