close
Choose your channels

ஓபிஎஸ் முன் நிற்கும் நிலை வந்தால் செத்துருவேன். நாஞ்சில் சம்பத்

Thursday, April 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணியை ஆதரித்த நாஞ்சில் சம்பத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சமூக வலைத்தள பயனாளிகளிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ஒட்டுமொத்த அம்மா அதிமுக தலைவர்கள் அனைவருமே டிடிவி தினகரனையும், சசிகலா குடும்பத்தையும் ஒதுக்கி வைத்துவிட்ட நிலையில் நாஞ்சில் சம்பத் மட்டும் இன்னமும் தினகரனுக்கு முழு ஆதரவு கொடுத்து வரும் பின்னணி மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், 'டிடிவி தினகரன் நன்றாக இருந்தால்தான் அதிமுக நன்றாக இருக்கும் என்றும் அறமும் நியாயமும் சசிகலா, தினகரன் பக்கமே உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் சசிகலாவும், தினகரனும் மட்டுமே தன்னுடைய தலைவர் என்றும் சூழலுக்கு தகுந்தவாறு மாறிக்கொள்வதுதான் நல்லது என்றும் கூறினார்.
தன்னுடைய இந்த கருத்தை கேட்டு யாராவது தன்னை காறித்துப்பினால் கூட துடைத்துவிட்டு சென்றுவிடுவேன் என்று கூறிய நாஞ்சில் சம்பத், ஒருவேளை ஓபிஎஸ் முன் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால், தற்கொலை செய்து செத்துருவேன்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.