close
Choose your channels

கன்பஃக்ஷன் அறையில் கண்ணீர் விட்ட ஓவியா

Tuesday, July 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒன்பது மட்டுமே இருந்தாலும் ஓவியா தனிமைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. ஓவியாவை தவிர அனைவரும் ஒரு குரூப்பாகவும், ஓவியா தனியாகவும் இருந்தாலும், ஓவியாவின் மனவலிமை அவரை அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க வைத்து வருகிறது. இதே நிலைமை பரணிக்கு ஏற்பட்டபோது அவர் விட்டால் போதும் என்று வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று கன்பஃக்ஷன் அறையில் ஓவியா பிக்பாஸிடம் மனம் விட்டு பேசினார், தான் அனைவரிடமும் மனம் விட்டு பேச ஆசைப்படுவதாகவும், ஆனால் தான் பேசுவதை யாரும் கேட்க விரும்புவதில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும் தன்னால் இந்த நிலையில் இருந்து மீண்டு வர முடியும் என்று நம்புவதாக கூறி கண்ணீர் வடித்தார்.

மேலும் கண்ணீர் வடிக்கும்போது தனது முகத்தை கேமிராவுக்கு முன்பு காண்பிக்காமல் திருப்பி கொண்டார். தன்னுடைய சிரித்த முகத்தை மட்டுமே எப்போதும் ரசிகர்கள் பார்க்க வேண்டும், அழுத முகத்தை அவர்கள் பார்க்க வேண்டாம் என்பதால் முகத்தை திருப்பி இருக்கலாம். இருப்பினும் வழக்கம்போல் கன்பஃக்ஷன் அறையில் ஓவியா யாரையும் குறை கூறவில்லை. ஜூலி பொய்க்கு மேல் பொய் சொல்வதாக மட்டும் வருத்தப்பட்டார்.

ஆனால் ஜூலி கன்பஃக்ஷன் அறையில் உட்கார்ந்ததுமே ஓவியாவைத்தான் குறை கூறினார். தான் வெளியே சென்றால் தன்னை காறி துப்புவார்கள் என்று ஓவியா தன்னை கூறியதாக கூறியதோடு, ஆரவ் மீதும் அவர் குற்றம்சாட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.