close
Choose your channels

சென்னை காவல்துறை ஆணையரிடம் ராகவா லாரன்ஸ் புகார்

Saturday, March 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஒரு திரை நட்சத்திரமாக மட்டுமின்றி அறக்கட்டளை மூலம் பல உதவிகள் செய்து வருகிறார். அவருடைய அறக்கட்டளையில் ஏழை, எளிய, வசதியில்லாத பல மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவருடைய அறக்கட்டளை மூலம் பலருக்கு சர்ஜரி செய்யப்பட்டு அவர்களுடைய உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அவர்களின் அறக்கட்டளை குறித்து இணையதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோ ஒன்று உலவி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
எனவே ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை மீது இணையதளத்தில்அவதூறு பரப்புவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை லாரன்ஸ் நற்பணி மன்ற நிர்வாகியான சங்கர் அவர்கள் காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.