close
Choose your channels

அஜித் கருத்துக்கு ராதிகா ஆதரவு

Thursday, April 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்ட மக்களிடம் ஏன் பணம் வசூல் செய்ய வேண்டும் என்ற அஜித்தின் கருத்தை தான் வரவேற்பதாக நடிகை ராதிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அஜித்தின் கருத்தை விஜய்யும் ஏற்றுக்கொண்டதால்தான் நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அவர் வரவில்லை என்றும் ராதிகா தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தந்தை எம்.ஆர்.ராதா, சகோதரர் ராதாரவி, கணவர் சரத்குமார் மற்றும் தானும் நடிகர் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்திருப்பதாகவும், ஆனால் தங்களுக்கு நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அழைப்பு விடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிமாநில நடிகர்களை அழைத்திருந்த நடிகர் சங்க நிர்வாகிகள் உள்ளூர் நடிகர்களுக்கு அழைப்பு விடுக்காதது வேதனையாக இருப்பதாகவும், தங்களை புறக்கணிக்கும் அளவுக்கு தாங்கள் என்ன தவறு செய்தோம் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கையில், "சரத்குமார், ராதிகா, ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை விளக்கம் கேட்டு சோகாஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் அழைப்பு விடுக்கவில்லை என்றும் அதே நேரத்தில் சரத்குமார் மகள் வரலட்சுமிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவரும் போட்டி முடியும் வரை கலந்து கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.