close
Choose your channels

ஆஸ்கார் நாயகனின் பாராட்டை பெற்ற 'பாகுபலி'

Wednesday, July 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய சினிமாவில் உள்ள முக்கிய வி.ஐ.பிக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது சமீபத்தில் வெளியான எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி படத்தைதான் கூறவேண்டும். உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது மட்டுமின்றி, வட இந்திய மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்கள் என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது இந்த படம் என்று கூறினால் அது மிகையில்லை. இந்த வரிசையில் தற்போது இந்த படத்தை பார்த்து அதிசயித்த மற்றொரு வி.ஐ.பி, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.


சமீபத்தில் சென்னை சத்யம் சினிமாஸ் தியேட்டரில் பாகுபலி படத்தை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான், படத்தை பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்ததாகவும், 'லைஃப் ஆப் பை' (Life of Pi) படத்திற்கு என்னை ஆச்சரியப்படுத்திய படம் இதுதான் என்றும், நம்மாலும் இதுபோன்ற பிரமாண்ட படங்கள் செய்ய முடியும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு அவரது பக்கத்திலேயே பாகுபலி படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் வசூல் ரூ.355கோடியை கடந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் நாயகன் பிரபாஸ், ஓய்வு எடுப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும், அவர் திரும்பி வந்தவுடன் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் 40% முடிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தின் மாபெரும் வெற்றி இரண்டாம் பாகத்தை இதைவிட பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என படக்குழுவினர்களுக்கு ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.