close
Choose your channels

அஜித் இயக்குனரை 'ஏமாளி' ஆக்கிய சமுத்திரக்கனி

Wednesday, March 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1999ஆம் ஆண்டு அஜித், ஜோதிகா நடித்த 'முகவரி' படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அஜித்தின் நடிப்பை வித்தியாசமான கோணத்தில் காட்டிய படம். அஜித், ரகுவரன், ஜோதிகா உள்பட அனைவரும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இந்த படத்தை துரை என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த படத்தை அடுத்து துரை இயக்கிய 'காதல் சடுகுடு', 'தொட்டி ஜெயா', 'நேபாளி' மற்றும் '6' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் நான்கு ஆண்டுகள் வேறு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த துரை, தற்போது சமுத்திரக்கனி நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
'ஏமாளி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் துபாயை சேர்ந்த ஒரு ஒருவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.