close
Choose your channels

சிறைக்கு வெளியே சசிகலா சென்றதற்கான புதிய வீடியோ ஆதாரம்: பெரும் பரபரப்பு

Monday, August 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக தண்டனை அனுபவித்து வரும் சசிகலா மற்றும் இளவரசி சிறையில் இருந்து வெளியே சென்று ஷாப்பிங் செய்ததாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் பரவியதோடு, ஒருசில வீடியோக்களும் வெளியாகின. ஆனால் சற்றுமுன் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் வெளியே சென்றுவிட்டு உள்ளே திரும்பும் வீடியோ ஒன்று தெளிவாக வெளியாகவுள்ளது.
இந்த வீடியோவில் முதலில் ஒரு காவல்துறை அதிகாரி உள்ளே வருகிறார். அவருக்கு இரண்டு காவல்துறையினர் சல்யூட் அடித்து வரவேற்பு தருகின்றனர். இதனையடுத்து சசிகலாவும், இளவரசியும் கையில் பையுடன் உள்ளே வருகின்றனர். அப்போது அவர்கள் இருவரும் சிறைக்கைதிகளுக்கான உடை அணியவில்லை
சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்றதற்கு இதைவிட வேறு பெரிய ஆதாரம் தேவையில்லை என்றே கருதப்படுகிறது. பணம் இருந்தால் குற்றவாளிகளுக்கு சட்டமும், அதிகாரிகள் தரப்பும் வளைந்து கொடுக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒன்றே சாட்சி என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.