close
Choose your channels

ஆயிரத்தில் ஒருவன் 2', 'புதுப்பேட்டை 2' எப்போது? செல்வராகவன் பதில்

Thursday, March 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் செல்வராகவனின் திரையுலக வாழ்க்கையில் கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' ஆகிய இரண்டு படங்களும் மிக முக்கியமான படங்கள். கார்த்தி, தனுஷ் ஆகிய இருவருக்குமே திருப்புமுனையை கொடுத்த இந்த படங்களின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கேட்கப்பட்டு வருவதுண்டு. இரண்டு படங்களின் கிளைமாக்ஸ்களும், இரண்டாம் பாகம் உருவாகுவதை உறுதிப்படுத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் 'புதுப்பேட்டை' ஆகிய இரண்டு படங்களின் இரண்டாம் பாக கதையை கடந்த இரண்டு வருடங்களில் எழுதி முடித்துவிட்டதாகவும், ஆனால் தற்போது அடுத்தடுத்த படங்களின் பணிகள் இருப்பதால் காலம் வரும்போது இந்த இரண்டு படங்களையும் இயக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். எனவே இவ்விரு படங்களும் இரண்டாம் பாகம் உருவாகுவது உறுதி என்பது மட்டும் இப்போதைக்கு தெளிவாகியுள்ளது.
மேலும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது என்பதும், அவர் தற்போது சந்தானம் நடித்து வரும் 'மன்னவன் வந்தானடி' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.