close
Choose your channels

தனுஷுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது உண்மைதான்: செளந்தர்யா ரஜினிகாந்த்

Wednesday, July 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய அனுபவம் குறித்து செளந்தர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார்.
படத்தை இயக்கும்போது தனுஷின் தலையீடு அதிகமாக இருந்ததா? என்ற கேள்விக்கு பதிலளித்த செளந்தர்யா, 'நாங்கள் இருவரும் இணைந்து நல்ல நண்பர்களாகத்தான் இந்த படத்தை உருவாக்கினோம். இருவரும் எப்போதும் இந்த படத்தின் கதை, கேரக்டர்கள், காட்சி அமைப்புகள் குறித்து சேர்ந்தே ஆலோசனை செய்வோம். இருப்பினும் ஒருசில விஷயங்களில் எங்கள் இருவருக்கும் இடையே சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அதை நாங்கள் இருவரும் பேசி ஒருமித்த கருத்தை வரவழைத்து கொள்வோம். தனுஷ் இந்த துறையில் அனுபவம் உள்ளவர் என்பதால் அவருடைய ஐடியாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஆனாலும் திரைக்கதை அமைப்பதில் அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்' என்று கூறினார்
மேலும் ரஜினிகாந்த், தனுஷ் ஆகிய இருவரையும் இயக்கியதில் யார் படத்தை இயக்க வசதியாக இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த செளந்தர்யா, 'இருவருமே தொழில் மீது அக்கறை கொண்டவர்கள் என்பதால் இருவர் படங்களையும் இயக்குவதில் எனக்கு எளிதாக தான் இருந்தது. இருவருமே கேமிரா முன் நின்றுவிட்டால் சீரியஸ் ஆகிவிடுவார்கள். என்னை அவர்கள் மகள் என்றோ, மைத்துனி என்றோ பார்த்ததில்லை' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.