close
Choose your channels

ஃபைனான்சியர் போத்ரா மீது பாரிவேந்தர் பரபரப்பு புகார்

Thursday, August 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சினிமா ஃபைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே. அவர் கைது செய்யப்பட்டவுடன் அவரால் பலர் பாதிக்கப்பட்டிருப்பது குவிந்து கொண்டிருக்கும் புகார்களில் இருந்து தெரிய வருகிறது.
இந்த நிலையில் பிரபல கல்வியாளர் பாரிவேந்தர் சற்றுமுன் போத்ரா மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளுடன் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் 'பணம் பறிக்கும் நோக்கத்துடன் சினிமா பைனான்சியர் போத்ரா தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், போத்ரா மட்டுமின்றி அவருடைய இரண்டு மகன்களும் கடன் கொடுத்ததாக கூறி தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் மோசடி செய்த மதனிடம் ரூ.7.5 கோடி கடன் கொடுத்துவிட்டு அந்த பணத்தை தன்னிடம் கொடுத்ததாக போத்ரா காவல்துறையினர்களிடம் பொய்மனு கொடுத்ததாகவும், போத்ரா மீதும் அவரது மகன்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரிவேந்தர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பாரிவேந்தரின் புகாரை அடுத்து போத்ரா மீது இன்னும் பலர் கொடுக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.