close
Choose your channels

ரஜினி யாருடன் கூட்டணி வைக்கக்கூடாது: திருமாவளவன் கருத்து

Saturday, May 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து ஒரிரு வார்த்தைகள் தான் பேசினார். ஆனால் அதுவே தமிழக அரசியலில் ஒரு பெரும் புயலை கிளப்பிவிட்டது. தமிழக அரசியல்வாதிகள் அனைவருக்கும் 'ரஜினி ஜூரம்' பிடித்துவிட்டதாக டுவிட்டரில் கூட கிண்டலுடன் பதிவுகள் வருகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து கூறிய திருமாவளவன், ரஜினி கூறியது போல தான் தலித்துக்களுக்கு மட்டும் போராடவில்லை என்றும் ஒட்டுமொத்த தேச மக்களின் நலனுக்காக, தான் போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 40 வருடங்களாக தமிழக பிரச்சனைகளை உற்று நோக்கி வரும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்தால் சிறப்பாக செயல்படுவார் என்றும் ரஜினி அரசியலுக்கு வந்தபின்னர் காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.