close
Choose your channels

மக்களுக்கு நல்ல செய்ய கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்: விஷால்

Thursday, September 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் கோலிவுட் திரையுலகினர் கையில் தான் உள்ளது. இன்னும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலருக்கு முதல்வர் நாற்காலி காத்திருப்பதாகவும் எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்த நிலையில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வந்து புரட்சியை ஏற்படுத்திய விஷாலும் விரைவில் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த கருத்தை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்.

சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியபோது, 'இன்றைய அரசியல்வாதிகளின் பருப்பு இனி வேகாது. அரசியல்வாதிகள் அவர்கள் அவர்களே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கின்றனர். இதனால் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு எதிர்காலத்தில் அதிகமாகும். அந்த சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அணிலாகவோ, பாலமாகவோ கண்டிப்பா இருப்பேன்.

பவருக்கு வந்தாதான், அதிகமா மக்களுக்கு நல்லது பண்ண முடியும்னு சூழ்நிலை இருந்தா, அதுதான் அரசியல்னா நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்' என்று விஷால் கூறியுள்ளார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் செய்த புரட்சியில் தமிழகம் முழுவதும் அவர் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.