close
Choose your channels

கொரோனா: உடனடி நடவடிக்கை தேவை இல்லாவிட்டால் இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்!!! ராகுல்காந்தி கருத்து 

Thursday, March 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா: உடனடி நடவடிக்கை தேவை இல்லாவிட்டால் இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்!!! ராகுல்காந்தி கருத்து 


இந்தியாவில் கொரோனா பரவல் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தோனிஷியாவைச் சேர்ந்த பயணிகள் 7 பேருக்கு தெலுங்கானாவில் வைத்து பரிசோதிக்கப் பட்ட நிலையில் அவர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. மேலும், ராஜஸ்தானில் 3 பேருக்கு கொரோனா இருப்பதும் புதிதாகக் கண்டறியப் பட்டு இருக்கிறது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்து இருக்கிறது.

இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா மிக, மோசமான விலையை கொடுக்க நேரிடும் என காங்கிரஸின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் “விரைவான தீர்க்கமான நடவடிக்கைகளே கொரோனாவை எதிர்கொள்வதற்கான சரியான பதிலாக இருக்கும்” என பதிவிட்டு உள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.