close
Choose your channels

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

Thursday, November 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இதையடுத்து கனமழை பொழியும் இடங்களில் அந்ததந்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.