close
Choose your channels

மீண்டும் ஒரு ஆணவக்கொலை: மகளை சாம்பலாக்கி நீரில் கரைத்த கொடூர பெற்றோர்

Monday, December 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உடுமலையில் கவுசல்யாவின் கணவர் சங்கர், தெலுங்கானாவில் அம்ருதாவின் கணவர் பிரணாய் என அவ்வப்போது ஆணவக்கொலைகள் நடந்து கொண்டிருப்பது நம் நாட்டில் வாடிக்கையாகிவிட்டது. படிப்பறிவு, நாகரீகம் முன்னேறினாலும் இன்னும் ஜாதி என்ற பிசாசை கட்டியழும் பெற்றோர்கள் ஒருசிலர் இருப்பதால் இந்த ஆணவக்கொலை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்திலும் ஒரு ஆணவக்கொலை நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளத்.

ஆந்திர மாநிலத்தில் மஞ்சிரியாலா மாவட்டத்திலுள்ள ஜன்னாரம் மண்டலம் தலமடுகு என்ற கிராமத்தை சேர்ந்த அனுராதா என்ற இளம்பெண் லட்சுமி ராஜன் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதல் அனுராதாவின் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததும் லட்சுமிராஜன் வேறு ஜாதி என்பதால் அவர்கள் இந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் அனுராதா-லட்சுமிராஜன் காதல் ஜோடி கடந்த 3ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த விஷயத்தை அறிந்த அனுராதாவின் பெற்றோர், அனுராதாவை தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்து அடித்து துன்புறுத்தினர். ஒரு கட்டத்தில் ஜாதிவெறி தலைக்கு ஏற மகள் என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தினர். அதோடு வெறி அடங்காமல் அனுராதாவின் சாம்பலை எடுத்து அருகில் இருந்த நீர்நிலையில் கரைத்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அனுராதாவின் பெற்றோர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.