close
Choose your channels

11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் கைது! திருச்சியில் பயங்கரம்

Saturday, January 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவி ஒருவரை அவரது காதலரே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை அடுத்த வடக்கு நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 31ம் தேதி புத்தாண்டு பிறக்கும் உள்ள நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் நிலைய அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பக்கத்து ஊரான தெற்கு பாகனூர் என்ற பகுதியில் ஒரு இளம்பெண்ணின் உடல் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவர்தான் காணாமல் போன பள்ளி மாணவி என்பதையும் உறுதி செய்தனர். இதனை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்த போது மாணவியும் தெற்கு பாகனூர் பகுதியை சேர்ந்த மதி என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் புத்தாண்டை கொண்டாட மாணவியை மதி தனது ஊருக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கே உள்ள புதர் ஒன்றில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து என தெரிந்து மாணவியை கொலை செய்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. 

இதனை அடுத்து மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.