close
Choose your channels

தாலி கட்டிய சில நிமிடங்களில் தற்கொலை: 19 வயது காதல் ஜோடியின் விபரீத முடிவு

Thursday, August 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாலி கட்டிய சில நிமிடங்களில் 19 வயது காதல் ஜோடி கோவில் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரியூர் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் அதே பகுதியை கவிதா என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் இந்த காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை

இதனை அடுத்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு அம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு குமார் தனது காதலி கவிதாவின் கழுத்தில் தாலி கட்டினார். அதன் பின்னர் இருவரும் அந்த கோவிலின் இரும்பு கேட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்

கோவில் கேட்டில் ஒரு ஆணும் பெண்ணும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்து மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்

இந்த விசாரணையில் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும் ஆனால் பெற்றோர் சம்மதம் கிடைக்காததால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்தது. ஆனால் அதே நேரத்தில் இது தற்கொலையா அல்லது யாரேனும் கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டு விட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.