close
Choose your channels

முடிவுக்கு வந்தது விவோ ஸ்பான்ஸர்: பிசிசிஐ அறிவிப்பு

Thursday, August 6, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சர் கூட்டணியில் இருந்து விவோ விலகியிருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த ஐபிஎல் போட்டி குறித்து விவாதம் செய்வதற்காக ஐபிஎல் ஆட்சி மன்ற குழு இன்று கூடியது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் ஸ்பான்சராக இதுவரை விவோ என்ற சீன நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தற்போது அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் லடாக் பகுதியில் ஏற்பட்ட இந்திய சீன வீரர்கள் மோதல் காரணமாக இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. சீன பொருட்களை இந்தியர்கள் வாங்கக்கூடாது மற்றும் சீன பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது என்ற கோரிக்கைகள் வலுத்து நிலையில் சீன நிறுவனமான விவோவுடன் செய்யப்பட்டிருந்த ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து விவோவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து பிசிசிஐ அதிரடி முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.