close
Choose your channels

'2018' பட இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதியா?

Wednesday, July 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ’2018’ படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் வெளியான மலையாள திரைப்படமான ’2018’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. வெறும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 160 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் மலையாள திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜூட் அந்தாணி ஜோசப் என்பவரின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் சற்றுமுன் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. இயக்குனர் ஜூட் அந்தாணி ஜோசப் இயக்கும் அடுத்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தில் இரண்டு நாயகர்கள் நடிக்க இருப்பதாகவும் அவர்கள் விஜய் சேதுபதி மற்றும் நிவின் பாலி என்றும் கூறப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.