close
Choose your channels

தடுப்பூசி போட்டாதால் ரூ.5.50 கோடி பரிசு பெற்ற 25 வயது இளம்பெண்!

Tuesday, November 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தடுப்பு ஊசி போட்டதால் ரூபாய் 5.50 கோடி பரிசு பெற்ற 25 வயது இளம்பெண் குறித்த தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த குலுக்கள் நடந்த நிலையில் 25 வயது இளம்பெண் ஜோனானே ஜூ என்பவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. அவருக்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர் பரிசு பணமான கிடைத்துள்ளது என்பதும் இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 5.50 கோடி ரூபாய்க்கு சமம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பரிசுப் பணத்தை வைத்து தனது குடும்பத்துடன் உலகம் முழுவதும் சுற்றுலா செல்ல இருப்பதாகவும் குறிப்பாக சீனாவிற்குச் சென்று சீன புத்தாண்டு தினத்தை கொண்டாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.