close
Choose your channels

சென்றாயன் எவிக்சனில் நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்

Tuesday, September 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் செண்ட்ராயன் வெளியேறியதை அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் பலரால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. ஐஸ்வர்யாதான் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர், ஆனால் அவர் வெளியேறவில்லை என்றாலும் பரவாயில்லை, அவருக்கு பதில் மும்தாஜ் அல்லது விஜயலட்சுமி வெளியேறியிருந்தால் கூட இவ்வளவு ஆதங்கம் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால் 1% பேர் கூட எதிர்பார்க்காத சென்றாயன் வெளியேற்றம் என்றவுடன் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து கொண்டிருந்த அனைத்து ஆடியன்ஸ்களுக்கும் கடும் அதிர்ச்சியாம்

இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து கொண்டிருந்தவர்களின் டுவிட்டர் தகவலின்படி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் நிகழ்ச்சி அமைப்பாளர்களுடன் கமல் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்ததாகவும், கடைசியில் சென்றாயன் பெயரை சொல்லிவிட்டு அந்த கார்டை கோபத்தில் தூக்கி எறிந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் அதே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் மும்தாஜை கமல் வறுத்தெடுத்தார் என்பதை பார்த்தோம். ஆனால் நாம் பார்த்ததெல்லாம் கொஞ்சம்தானாம். நிஜத்தில் கமல் கடும் கோபத்தில் இருவரையும் தாளித்து எடுத்துவிட்டதாகவும், அந்த காட்சிகள் எல்லாம் எடிட்டிங்கில் கட் செய்யப்பட்டுவிட்டதாகவும் நேரில் பார்த்தவர்களின் டுவீட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் சென்றாயனுக்கு கமல்ஹாசன் கூடுதல் பேமெண்ட் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் கமல்ஹாசனின் விருப்பமின்றியே அன்றைய தினம் சென்றாயன் வெளியேற்றம் நடந்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் இப்படி ஒரு மோசடியான நிகழ்ச்சியில் இனியும் தொடராமல் அவர் வெளியேறினால் அவரது மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்பதே பலரது கருத்தாகும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.