close
Choose your channels

தமிழக அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை: பதவியும் பறிபோகிறது

Monday, January 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றின்போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக பாலகிருஷ்ணா ரெட்டி உள்பட மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்

இந்த வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர்கள் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவருடைய அமைச்சர் பதவி பறிபோவதோடு உடனடியாக அவர் எம்எல்ஏ என்ற அந்தஸ்தையும் இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.