close
Choose your channels

கொரோனா பாதிப்பு 477 பேர்கள், குணமானோர் 939 பேர்கள்: தமிழகத்தில் பாசிட்டிவ் அறிகுறி

Saturday, May 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த வாரம் வரை கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில் ஓரிரு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 477 என சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த 477 பேர்களில் 93 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,599 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 477 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 332 என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,278 என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 939 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும், கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களை விட இருமடங்கு கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் எண்ணிக்கை உள்ளதால் இதுவொரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால்  தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.