close
Choose your channels

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு....!

Monday, June 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 4,804 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


"தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து, உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 711 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 4,804 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 70 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு நாளில், கோவிட் வைரஸ்-லிருந்து 6,553 நபர்கள் குணமடைய, இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 97 ஆயிரத்து 336-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை பெற்றவர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது.


சென்னை - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 291 பேர்
- உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை - 4 பேர்
- சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் - 363 பேர்


ஈரோடு - 506 பேர்
சேலம் - 318 பேர்
கோவை - 597 பேர்
பெரம்பலூர் - 18 பேர்
ராமநாதபுரம் - 19 பேர்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.