close
Choose your channels

மெய்மறந்து தூங்கிய பெண்ணின் வாய்க்குள் 4 அடி நீளப்பாம்பு!!! வைரலாகும் வீடியோ!!!

Tuesday, September 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மெய்மறந்து தூங்கிய பெண்ணின் வாய்க்குள் 4 அடி நீளப்பாம்பு!!! வைரலாகும் வீடியோ!!!

 

ரஷ்யாவில் வீட்டு முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வாய்க்குள் 4 அடி நீளப்பாம்பு புகுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகெஸ்தான் மாகாணம் லெவாஷி என்ற கிராமத்தில் தனது வீட்டு முற்றத்தில் ஒரு இளம்பெண் தூங்கியிருக்கிறார். தூங்கி முடித்து கண் விழித்தபோது அவரின் வயிற்றுக்குள் ஏதோ நெண்டுவது போன்ற உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாது வாந்தி வருவது போலவும் உணர்ந்து இருக்கிறார்.

இதனால் பதறிப்போன அப்பெண் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு ஸ்கேன் செய்துபார்த்த மருத்துவர்கள் ஏதோ உயிரினம் புகுந்து இருக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் எண்டோஸ்கோபி மூலம் வாய் வழியாக அப்பெண்ணின் வயிற்றுக்குள் துலாவி இருக்கின்றனர். மேலம் எஸ்டோஸ்கோபி கருவி மூலம் வயிற்றுக்குள் இருக்கும் உயிரினத்தை எடுக்கும் முயற்சியில் மருத்தவர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக எண்டோஸ்கோபி கருவி மூலம் 4 அடி நீளப்பாம்பு வாய் வழியாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அப்பெண் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.