close
Choose your channels

கேரள முதல்வரிடம் நிவாரண நிதியளித்த 80களின் நாயகிகள்

Friday, August 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் கடந்த 80களில் கொடிகட்டி பறந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொரு வருடமும் கூடி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக உள்ளனர். அந்த வகையில் இந்த குரூப் தற்போது கேரள முதல்வரை சந்தித்து தங்களுடைய நிவாரண நிதியை அளித்துள்ளது.

நடிகைகள் குஷ்பு, சுஹாசினி மற்றும் லிசி ஆகியோர் கேரள முதல்வரை சந்தித்து தாங்கள் வசூல் செய்த ரூ.40 லட்சத்தை இன்று வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளனர். இதுகுறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நாங்கள் அனைவரும் தனித்தனியே கேரள வெள்ள நிவாரண நிதியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கியபோதிலும் எங்களுடைய 80களின் குரூப்பில் இருந்து வசூல் செய்த தொகையை தற்போது முதல்வரிடம் அளித்துள்ளோம். கேரள மக்களுக்கு இந்த சமயத்தில் நாம் எல்லோரும் உதவ வேண்டியது மிகவும் அவசியம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை லிசி மற்றும் சுஹாசினி கூறியபோது, 'நாங்கள் ஒவ்வொருவரும் ரூ.25 லட்சம், ரூ.15 லட்சம் என தனித்தனியே நிவாரண நிதி கொடுத்திருந்தாலும், எங்களுடைய 80களின் குரூப் மற்றும் எங்கள் நண்பர்களிடம் சேகரித்த தொகையை இன்று முதல்வரிடம் வழங்கியுள்ளோம்' என தெரிவித்தனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.