close
Choose your channels

தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி வந்தால் மட்டும் போதாது.. இதையும் செய்ய வேண்டும்: 80s நடிகை பேட்டி..!

Monday, January 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி வந்தால் மட்டும் போதாது, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வழங்க வேண்டும் என்று 80களில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 80களில் பிரபலமாக இருந்தால் நடிகைகளில் ஒருவர் ரோகிணி. பிரபல நடிகர் ரகுவரனின் மனைவியான இவர் பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் தற்போதும் கூட அவர் பிசியான நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’வேட்டையன் உள்பட ஒரு சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை மாரத்தான் போட்டிகளை தொடங்கி வைத்த ரோகிணி அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமரின் தமிழ்நாடு பயணம் குறித்து பேசிய அவர் ’பிரதமர் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவது மட்டுமின்றி மாநிலத்திற்கு தேவையான திட்டத்தையும் வழங்க வேண்டும். பிரதமர் ஒவ்வொரு முறையும் வரும்போது பிரதமர் என்ற பதவிக்கு நாம் மரியாதை கொடுத்து அவரை வரவேற்கிறோம். அதேபோல் அவர் தமிழகத்திற்கு தேவையான அனைத்தையும் செய்தால் நன்றாக இருக்கும், சும்மா வந்து பார்த்துவிட்டு போவதால் எந்த பலனும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ’தாய் மொழியில் கல்வி பயில்வது மிகவும் முக்கியமானது என்றும் தாய் மொழியில் கற்பித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்றும் அனைவரும் தாய் மொழியை உயர்த்தி பிடித்தாலே அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.