close
Choose your channels

முடிவுக்கு வந்தது நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!

Saturday, January 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’தர்பார்’ திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நயன்தாரா நடித்த அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பிரபல நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வந்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நடைபெற்று வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் தொடர்ச்சியாக 44 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக அதாவது 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பில் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்த நடிகை நயன்தாராவுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாகவும் மீதி உள்ள படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த உடன் தொழில்நுட்பப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது

இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கிரிஷ் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் இந்த ஆண்டு நயன்தாராவுக்கு இந்த ஆண்டின் இரண்டாவது வெற்றிப்படமாக அமையலாம் என்று கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.