close
Choose your channels

யூடியூப் வீடியோக்களுக்கு சென்சாரா? சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

Wednesday, July 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் வீடியோக்களை பதிவு செய்வது என்பது ஒரு பொழுதுபோக்காக இருந்த நிலை மாறி தற்போது வருமானத்திற்காக யூடியூப் வீடியோக்களை பதிவு செய்யும் போக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக வருமானம் பெறுவதற்காக, அதிக பார்வையாளர்களை வரவழைப்பதற்காக சில சர்ச்சைக்குரிய விஷயங்களை கையிலெடுத்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை ஒரு சிலர் பதிவு செய்து வருவதால் போலீஸ் புகார், நீதிமன்ற வழக்கு என சில யூடியூப் பயனாளிகள் சந்தித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட ஒரு நடிகையின் திருமணம், கந்தசஷ்டி விவகாரம் உள்பட ஒருசில சர்ச்சைக்குரிய யூடியூப் வீடியோக்களால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வீடியோக்களை பதிவு செய்வதில் சென்சார் முறை கொண்டு வரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

அந்த வகையில் தற்போது சென்னை ஐகோர்ட்டில் இது குறித்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

யூடியூப் உள்பட சமூக வலைதளங்களில் தினமும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வீடியோக்கள் பதிவு செய்யப்படுவதால் அவை அனைத்தையும் தணிக்கை செய்வது செய்வது சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.