close
Choose your channels

கொரோனா விவகாரத்திலும் அதிரடி காட்டும் ரூபா ஐபிஎஸ்!!!

Wednesday, July 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா விவகாரத்திலும் அதிரடி காட்டும் ரூபா ஐபிஎஸ்!!!

 

கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் சிறைத்துறை டிஐஜி யாக இருந்தவர் ரூபா ஐபிஎஸ். இவர் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறது, இந்த விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் பங்குண்டு என வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். இதனால் நேர்மையான அதிகாரியாகவும் அதிரடிக் காட்டுபவராவும் ஊடகங்கள் மத்தியில் புகழப்பட்டார். பின்னர் வடமாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது கர்நாடக காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.

கொரோனா நேரத்தில் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் அதிகமான கட்டணத்தை வசூலிப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டன. அதையடுத்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மண்டல வாரியாக ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக் குழுவை அமைத்து இருந்தார். அந்த வகையில் பெங்களூர் மண்டல கண்காணிப்புக் குழு தலைவராக இருந்துவரும் ரூபா ஐபிஎஸ் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப் பட்டதாகக் கருதப்படும் கூடுதல் தொகையை மீட்டு மக்களிடம் திரும்பி வழங்கியிருக்கிறார். கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.24.80 லட்சம் பணத்தை மீட்டு பொது மக்களிடமே இவர் வழங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் 50 விழுக்காடு படுக்கையை ஒதுக்க வேண்டும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகளை அம்மாநில அரசு கூறியிருக்கிறது. ஆனால் சில மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அட்வான்ஸ் பணமாக முன்னமே ரூ. 50 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு படுக்கையை புக் செய்து வைத்திருப்பதாகவும் தற்போது குற்றச்சாட்டம் பட்டுள்ளது. இப்படியான பல விவகாரங்களை ரூபா ஐபிஎஸ் விசாரணையில் வெளிப்படுத்தி இருக்கிறார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.