close
Choose your channels

70-75 அடி ஆழத்திற்கு சுரங்கம்; சுர்ஜித்தை மீட்க அடுத்த முயற்சி

Saturday, October 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டு வயது குழந்தையான சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை கீழே விழுந்த நிலையில், அந்த குழந்தையை மீட்க கடந்த பல மணி நேரமாக தேசிய மீட்பு படையினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்

இந்த நிலையில் குழந்தையை மீட்கும் புதிய முயற்சியாக மஞ்சம்பட்டி குழுவினர் கருவி ஒன்றை பயன்படுத்தி குழந்தையின் தலையை கவ்வி பிடித்ததாகவும் இதனை அடுத்து விரைவில் குழந்தை மீட்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன

இந்த திட்டம் சக்சஸ் ஆனதா? என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் அடுத்த முயற்சியாக குழந்தை விழுந்த கிணறு அருகே ஆள் இறங்கும் அளவிற்கு சுரங்கம் தோண்ட தேசிய மீட்பு படையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சுரங்கத்தில் ஒரு ஆள் இறங்கி குழந்தை இருக்கும் கிணறுக்கும் இந்த சுரங்கத்திற்கும் இடையே ஒரு பாதையை ஏற்படுத்தி அதன் மூலம் குழந்தையை வெளியே கொண்டுவர தேசிய மீட்பு படையினர் திட்டமிட்டுள்ளனர்

இந்த சுரங்கம் ஒரு மீட்டர் தொலைவில் 70 முதல் 75 அடி ஆழத்திற்கு தோண்டப்படும் என தெரிகிறது. இந்த திட்டமானது வெற்றிபெற்று நல்லபடியாக குழந்தையை மீட்கப்பட வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.