close
Choose your channels

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் குறித்து லதா ரஜினிகாந்த்!

Saturday, October 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சரியாக 24 மணி நேரம் முடிந்துவிட்டது. நேற்று மாலை 5.30க்கு ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித்தை மீட்க 24 மணி நேர மீட்புப் போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது

எப்படியும் குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்று மீட்பு பணியினர் இரவு பகல் பாராமல் தீவிரமாக தங்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குழந்தையை மீட்க வேண்டுமென்றும் ஆழ்துளை கிணறு குறித்த விழிப்புணர்வு குறித்தும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அந்த வகையில் சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த் ’குழந்தை சுர்ஜித் மீட்பு குறித்தும் ஆழ்துளை கிணறு குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

குழந்தை எப்போது மீட்கப்படும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.