close
Choose your channels

'2.0' திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும்: திடீர் மனுவால் பரபரப்பு

Tuesday, November 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. உலகம் முழுவதும் திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக முதல் நான்கு நாட்களுக்கு முன்பதிவும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என , மத்திய தணிக்கை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் செல்போன் குறித்து தவறாக சித்தரித்திருப்பட்டிருப்பதாகவும், எனவே படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என்றும் இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கம் மத்திய தணிக்கை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்துள்ளது. இந்த மனுவின் மீது த்திய தணிக்கை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை அறிய ரஜினி ரசிகர்கள் அனைவரும் திகிலுடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.