close
Choose your channels

'சார்லி சாப்ளின் 2' இயக்குனர் கொடுத்த போலீஸ் புகார்

Monday, January 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'சார்லி சாப்ளின் 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில் 'சார்லி சாப்ளின் 2' படத்தை நல்லவிதமாக விமர்சனம் செய்ய பிரபல ஆன்லைன் விமர்சகர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டியதாக இயக்குனர் ஷக்தி சிதம்பரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் விமர்சகர்களால் தங்களது படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக பல தயாரிப்பாளர்கள் புகார் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.