close
Choose your channels

வாகா எல்லையில் இராணுவ வீரர்களுடன் கைக்குலுக்கும் தல அஜித்… வைரல் புகைப்படங்கள்!

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் தல அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சமீபகாலமாக அவர் பைக் ரைட்டில் அடிக்கடி ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்த புகைப்படங்களும் சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை இணைக்கும் வாகா எல்லையில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய இராணுவ வீரர்களுடன் நடிகர் அஜித் அவர்கள் கைக்குலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் “வலிமை“ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இருக்கிறது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் இந்தப் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து நடிகர் அஜித் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணத்திற்கு நடுவே அவர் “வாகா“ எல்லைக்கும் சென்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து வாகா எல்லையில் இந்தியத் தேசியக் கொடியை கையிலேந்தி நடிகர் அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அங்கு பணியாற்றிவரும் இராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடியதோடு கைக்குலுக்கிய படியே அவர்களுடன் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.