close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் வந்த அஜித்தின் அதிகாரபூர்வ பதிவு: ஸ்தம்பித்த இணையதளங்கள்!

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதால் அவர் சொல்ல விரும்பும் கருத்துகளை தனது மேனேஜரின் சமூக வலை தளங்கள் மூலமே வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் அஜித் மேனேஜரின் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. நாம் குழந்தைகளாக இருந்தபோது கேள்விப்பட்ட நீதி கதை தான் இந்த பதிவு.

ஒரு தம்பதியினர் ஒரு கழுதையுடன் சென்று கொண்டிருக்கும்போது கழுதை மீது ஏறி உட்கார்ந்து செல்லாமல் தம்பதியினர் நடந்து செல்கின்றனர் என பார்வையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனையடுத்து இருவரும் கழுதை மீது ஏறி சென்றபோது ஒரு கழுதை மீது இருவர் ஏறிக்கொண்டு கழுதையை துன்புறுத்துகிறார்கள் என்று கூறினார்கள். அதன் பிறகு மனைவியை மட்டும் கழுதை மேல் உட்கார வைத்துவிட்டு கணவர் நடந்து சென்ற பொழுது தன் மனைவியை முதலாளி போல் உட்கார வைத்து கொண்டு செல்கிறார் இந்த கணவர் என்று குற்றஞ்சாட்டினர். அதன் பிறகு கணவர் மட்டும் உட்கார்ந்து கொண்டு சென்றபோது, ஒரு பெண்ணை நடக்க வைத்து விட்டு அந்த ஆண் கழுதை மேல் செல்கிறார் என்று குற்றம் கூறினார்கள். அதன் பிறகு கழுதையை இருவரும் தூக்கிக் கொண்டு சென்றபோது கழுதை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு செல்லாமல் இந்த மடையர்கள் கழுதையை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று கூறினார்கள்.

இந்த நீதி கதையின் மூலம் குறை சொல்பவர்களின் கருத்தை காதில் வாங்கி கொள்ளக்கூடாது என்ற கருத்தை அஜித்தின் மேனேஜர் தெரிவித்துள்ளார். இந்த நீதிக்கதையின் பதிவு தற்போது இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.