close
Choose your channels

ஆயில் மசாஜ் எடுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ் நடிகர்!

Thursday, December 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆயில் மசாஜ் எடுத்ததால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் எஸ்வி சேகர் பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் எஸ்வி சேகர் சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எஸ்வி சேகர் ஆயில் மசாஜ் எடுத்ததாகவும் அதனால் திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் இனிமேல் ஆயில் மசாஜ் எடுக்க மாட்டேன் என்றும், நாம் ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறோம் என்றும் எஸ் வி சேகர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

மேலும் கடவுள் அருளாலும் மருத்துவர் காமேஷ்வரன் சிகிச்சையாலும் தற்போது குணமடைந்து விட்டேன் என்றும், தற்போது வீட்டில் முழு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.