close
Choose your channels

எத்தனையோ பிரமாண்டமான படம் வரலாம், ஆனால்.. நடிகர் ஜெயராம் பேட்டி!

Saturday, April 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எத்தனையோ பிரமாண்டமான படம் வரலாம், ஆனால் இதுமாதிரி ஒரு படம் இருக்காது என நடிகர் ஜெயராம் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடிகரும் மணிரத்னம் திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். அவ்வாறு இருந்த எனக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். மேலும் ’பொன்னியின் செல்வன்’ போன்ற பிரமாண்டமான ஒரு திரைபடத்தில் ஆழ்வார்க்கடியான் போன்ற ஒரு மிகப்பெரிய கேரக்டரில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் அதிகாலை 6 மணிக்கு மிகச்சரியாக தொடங்கி விடும் என்றும் 03.30 மணிக்கு அனைவரும் எழுந்து படப்பிடிப்புக்கு தயாராகி விடுவார்கள் என்றும் ஆறு மணிக்கு முதல் ஷாட் ஆட ஆரம்பித்துவிடும் என்றும் அதுவும் நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்ட்களுடன் படப்பிடிப்பு மிகவும் கச்சிதமாக தொடங்கும் என்றும் இந்த ஒரு ஒழுங்கை நான் மணிரத்னம் படத்தை தவிர வேறு யாரிடமும் பார்த்ததில்லை என்றும் ஜெயராம் தெரிவித்துள்ளார்

மேலும் இந்தியாவில் பிரம்மாண்டமான திரைப்படங்கள் எத்தனையோ வரலாம் ஆனால் அந்த படத்தின் மேலே மணிரத்தினம் என்ற கையெழுத்து உள்ள படம் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்றும், இந்த படம் மணிரத்னத்துடன் கூடிய பிரம்மாண்ட திரைப்படம் என்று நடிகர் ஜெயராம் கூறியுள்ளார். மேலும் ஜெயராம் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் முழு வீடியோ இதோ:

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.