close
Choose your channels

"துப்பு கெட்ட நிர்வாகம்" சேஷாத்ரி பள்ளி...! சரமாரியாக கிழித்தெடுத்த நடிகர் அசீம்...!

Thursday, May 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தான் ராஜகோபாலன். அப்பள்ளியில் படித்துவிட்டு, தற்போது மாடலிங் துறையில் இருக்கும் முன்னாள் மாணவி ஒருவர் தான் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, புகார் கொடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இப்பிரச்சனை வெடிக்க, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்தநிலையில் ராஜகோபாலன் மற்றும் சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் குறித்து நடிகர் அசீம் சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது,

"இப்பிரச்சனை ஆசிரியர் ராஜகோபாலனை மட்டும் சார்ந்ததல்ல, ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகத்தினருக்கும் தெரிந்தது தான். பள்ளியில் இத்தனை வருடங்களாக ஒரு ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சேஷாத்ரி நிர்வாகம் முட்டையை அடை காக்கும் கோழியைப் போல, ராஜகோபாலனை காப்பாற்றி வருகிறது. அங்கு இருப்பவர்களுக்கு இந்த ஆசிரியரின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் தெரிந்திருந்தும், கண்டும் காணாமலும், எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் இருந்துள்ளனர். மாணவிகள் புகார் கொடுத்தவுடன் ராஜகோபாலனை பணிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் துப்பு கெட்ட நிர்வாகம், தன் சமூகத்தை சேர்ந்த ஆசிரியர் என்பதால் அவனை காப்பாற்ற நினைக்கிறது. இந்த நிலையில் அரசு எடுத்திருப்பது சரியான முடிவே, அரசிற்கு "பிக் சல்யூட்" என்கிறார்.

ஆசிரியர் என்னும் உயர்ந்த பணியில் இருப்பவர்கள் இந்தமாதிரி கேவலமான செயல்களில் ஈடுபட்டு, ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தையும் கொச்சைபடுத்துகிறார்கள். ராஜகோபாலன் அங்குள்ள குழந்தைகளை மகள்களாக பார்த்திருந்தால், இந்த பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது. இவனுக்கு ஏற்பட்ட இச்சையால் மாணவிகளை துன்புறுத்தியுள்ளான். சேஷாத்ரி பள்ளி பிராமணர் கோட்பாடுகளை உடைய பள்ளி. கிறிஸ்துவர், இஸ்லாமியர்கள் மற்றும் கீழ்சாதி மக்களுக்கு இங்கு சீட் கிடைக்காது என்பது பெரும்பான்மையான மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது, அது நிதிர்சனமான உண்மையாகவும் இருந்து வருகிறது. ஆனால் இது பற்றி பேச தகுதியில்லாத காயத்ரி ரகுராம், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் பார்ப்பன எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு என மதவாதங்களை உள்ளிழுத்து சம்மந்தமில்லாமல் பேசி வருகின்றனர். மத்திய அரசு நம் கையில் உள்ளது, நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று மதபெருமையை தூக்கி பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தப்பு பண்ணவங்களுக்கு சாதி, மதம் எல்லாம் முக்கியமில்லை. யார் செய்தாலும், தவறு தவறு தான். ராஜகோபாலனுக்கு கொடுக்கும் கடுமையான தண்டனை மூலமாகத்தான், இதுபோன்ற வக்கிரபுத்தி உள்ளவர்கள் திருந்துவார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என பேசி முடித்தார் அசீம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos